Monday, March 7, 2011

நெல்லையில் சசிகலா

நெல்லை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திடீரென நெல்லை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுகவின் தேர்தல் வியூகங்கள், பிரசார இடங்கள், பிரசாரத்துக்கு வரும் ஜெயலலிதா தங்கு்மிடங்கள், தேர்தல் செலவுக்கு நிதி திரட்டுதல் போன்ற பணிகளை அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் சசிகலா ஓவ்வொரு பகுதிக்கும் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லைக்கு சசிகலா வருகை தந்தார். பாளை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஜெ பேரவை மாநில செயலாளருமான நயினார் நாகேந்திரன் வீ்ட்டுக்கு சென்ற அவர் அங்கு கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தினார்.

தேர்தல் பிரசாரத்துக்கு நெல்லைக்கு வரும் ஜெயலலிதா தங்குமிடம், தொகுதி நிலவரங்கள், நெல்லை மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் எவை என்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாம்.

சசிகலாவின் வருகையால் நெல்லையில் ஜெயலலிதா பிரசாரத்துக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் நெல்லை வருகை தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: