Tuesday, March 15, 2011

மதிமுக முடிவு என்ன?

சென்னை : ம.தி.மு.க., வின் உயர் நிலைக் கூட்டம், சனிக்கிழமை காலை 9 மணிக்கு, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.ம.தி.மு.க., வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம.தி.மு.க., உயர் நிலைக் குழு கூட்டம் வருகிற 19ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. மாவட்டச் செயலர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.ம.தி.மு.க., தலைமை அலுவலகமான, தாயகத்தில் நடக்கும் இந்த கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குவார்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: