Friday, March 4, 2011

பொய் வழக்கு போட்டதற்கு கண்டனம்: ஜெகன்மோகன் ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டும்; ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் மேயர் நவீந்திரநாத் ரெட்டி உள்பட முக்கிய தலைவர்கள் 25 பேர் மீது சமீபத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களது சார்பில் ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது, அதில், “நாங்கள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் என்பதால் போலீசார் எங்களை மிரட்டும் நோக்கத்தில் ஆள் கடத்தல் வழக்கில் எங்களை கைது செய்துள்ளனர். நாங்கள் யாரையும் கடத்தவில்லை. எங்களை விடுவிக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 10 பேரும் கோர்ட்டில் ஆஜராகி, “எங்களை ஜெகன் ஆதரவாளர்கள் கடத்த வில்லை. போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்” என்றனர்.

இதை விசாரித்த நீதிபதி ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட 25 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

No comments: