Tuesday, March 15, 2011

7 அணு உலைகள் நிறுத்தம்: ஜெர்மனி அதிரடி

ஜப்பானில் நில நடுக்கம், சுனாமியால் நிலை குலைந்துள்ளது அதில் அணு உலைகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. 3 அணு உலைகள் வெடித்ததில் அணு உலைகள் செயலிழந்து அணுக்கதிர் வீச்சு அதிகரித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து 7 அணு உலைகளின் செயல் பாட்டினை 3 மாதங்களுக்கு நிறுத்துவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்  பெர்னிலின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி  அதிபர் ஏன்ஜலா மார்க்கல் ஜெர்மனியில் தற்போது இயங்கி வரும் 17 அணு மின் உலைகளில்,1980 க்கு  முன்னர் செயல்படத்தொடங்கிய அணு மின் உலைகள் 7 தற்காலியமாக நிறுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டிற்குள் அணு உலைகளை அணைத்தையும் நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனியின் முந்தைய அரசு முடிவு செய்தது.   ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அம் முடிவு மாற்றப்பட்டது. இப்பொழுது ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் வீச்சு ஜெர்மனியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து ஜெர்மனியின் மாகான அரசுகளுடன்  பேசிய மார்க்கல் 7 உலைகள் அடுத்து 3 மாதத்திற்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

No comments: