Saturday, March 5, 2011

விருகம்பாக்கத்தில் பிரேமலதா போட்டி?

சென்னை: விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. போட்டியிட உள்ள தொகுதிகள் எவை- எவை என்று இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.ட

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான தே.மு.தி.க.வினர் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்பட தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்கனவே மனு கொடுத்து விட்டனர். அவர்கள் எந்தெந்த தொகுதியில் களம் இறங்குவார்கள் என்பதில் தொண்டர்களிடம் பலத்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தில் பிரேமலதாவை நிறுத்த அ.தி.மு.க.வும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments: