Tuesday, November 30, 2010

மறந்து விடலாமா பழைய பிரச்சனைகளை......

நான் பள்ளி படிக்கும் காலத்தில் ஒரு புதிர் கேட்டார் ஆசிரியர். ஒரு கோடு இருக்கிறது. அந்த கோட்டை வெட்டாமல் எப்படி சிறியதாக மாற்றுவாய்? என்று. பதில் தெரியாமல் விழித்தேன். அதற்குப் பக்கத்தில் அதை விட ஒரு பெரிய கோடு போட்டால் இது சிறியதாகி விடும் என்றார். சரியான புதிர் அது.

இப்போது நமது நாட்டில் நடக்கும் அவலங்களைப் பார்க்கும் போது அதுதான் எமக்கு தோன்றுகிறது. ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும். மீடியா, அரசியல், மக்கள் என அனைத்து தரப்பிலும் அதை விவாதித்து கொண்டிருப்பர். அடுத்ததாக ஒரு பிரச்சனை வரும். பழைய பிரச்சனையை மறந்து விட்டு புதியதை விவாதித்து கொண்டிருப்பர். கொஞ்சம் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், எடியூரப்பா போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு வருவோமா?


பழைய பிரச்ச்னைகள்:
[1]

கடந்த 2004 ஜுலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி இறந்தனர். இதற்குப் பின் எடுத்த அரசு நடவடிக்கைகள் என்னென்ன?வருடா வருடம் மலர் வளையம் வைப்பதோடு சரி.


கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி சென்னை அருகில் செம்மஞ்சேரியில் பள்ளி வாகனம் விபத்திற்குள்ளானது. யாருமே இதைப் பற்றி விவாதிப்பதில்லை. சரி அரசுதான் மறந்து விட்டது என்றால் அனைவருமே மறந்து விட்டனர். பொதுவில் பள்ளிகளில் நடக்கும் பிரச்சனைகளை விவாதிக்கும் பதிவு இது.

பள்ளிகளை அரசு கண்காணிக்கிறதா?
எத்தனை பள்ளிகளை அரசு கண்காத்து கொண்டிருக்கிறது?
பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இருக்கின்றார்களா?
பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களா?
பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணம் நியாயமானதாக இருக்கிறதா?
எத்தனை பள்ளிகளில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது?
மழை காலங்களில் மேற்சுவர் ஒழுகாமல் இருக்கிறதா?
எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது?
தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலை, நடுநிலையிலிருந்து உயர்நிலை, உயர்நிலையிலிருந்து மேல்நிலை என்று மாற்றுவதற்கு வரைமுறைகள் நடமுறப்படுத்தபடுகிறதா?
அறிவியல் செயல்முறைகள் படிக்க ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றவா?
அப்படி இருந்தால் அதில் எல்லா உபகரணங்களும் இருக்கிறதா?
வருகைப்பதிவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா?
மதிய உணவு சரியாக வழங்கப்படுகிறதா?
அப்படி வழங்கப்படும் உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
நூலகம் இருக்கிறதா?
நூலகத்தில் சரியான அளவில் புத்தகங்கள் இருக்கிறதா?
பள்ளி வாகனங்கள் சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா?
பள்ளியில் முதலுதவிக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறதா?
அறிவை வளர்க்கும் முறையில் கலை விழா நடத்தப்படுகிறதா?
கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறதா?
நாட்டு நலப்பணிதிட்டம், செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை போன்றவைகள் சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா?
இடைத்தேர்வுகள் சரியான முறையில் கண்காணிகப்படுகிறதா?
குழந்தைகளின் தேர்ச்சி விகிதம் கூடியிருக்கிறதா?
பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இருக்கிறதா?
இருந்தால் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா?


இன்னும் பல....

தொடரும்......

Saturday, November 27, 2010

செய்திகள் விமர்சனங்கள்

இன்று புதிதாய் பிறந்தோம்..

மகாகவி பாரதி....

இன்று முதல் ஒரு புதிய வலைத்தளம். அன்றாடம் உள்ள செய்திகளில் எம்முடைய விமர்சனங்கள், அறிவிப்புகள், துணுக்குகள் போன்றவை இடம்பெறும்.